Sunday, 8 November 2020

Thiruveethi varuginran

 பாடல் : திருவீதி வருகின்றான் 

ராகம் : ரீதிகௌள

தாளம் : ஆதி 


பல்லவி 

திருவீதி வருகின்றான் எந்தன் 

மனவீதி வருகின்றான் ராமன் (திருவீதி) 

அனுபல்லவி 

மிதிலையின் வீதியில் ஜனகன் மகளைக் கண்டு 

முறுவலுடன் அவள் திருமுகம் நினைந்து கொண்டு 

(திருவீதி)

சரணம் - 1

வில்வலிமை அறிந்து அவள் 

விழிவலிமையைக் கொண்டு

சுயம்வரம் வென்றவன் என் 

மனதையும் வென்றவன் (திருவீதி)

சரணம் - 2

ஒருமாது ஒருசொல் 

ஒரு செயல் என்று 

பெருமையுடன் இந்த 

நிலமிசை வாழ்ந்தவன்  (திருவீதி)

சரணம் - 3

சரணம் சரணம் என்று 

திருவடி பணிந்தவரை 

அருகழைத்து இருத்தி 

கருணை புரிந்தவன் (திருவீதி)

சரணம் - 4

ஒரு முறையே அவன் 

திருநாமம் உரைக்க 

பிறவிப்பிணி அகற்றி 

திருவருள் செய்பவன்  (திருவீதி)



1 comment:

  1. I do not know anything about karnAtic music; but my brain associated with "mA ramaNan... umA ramaNan" in Hindolam. AND my brain could not associate it with reeti-Gowlai. I liked the entire composition and the singing as well.

    ReplyDelete