பாடல் : திருவீதி வருகின்றான்
ராகம் : ரீதிகௌள
தாளம் : ஆதி
பல்லவி
திருவீதி வருகின்றான் எந்தன்
மனவீதி வருகின்றான் ராமன் (திருவீதி)
அனுபல்லவி
மிதிலையின் வீதியில் ஜனகன் மகளைக் கண்டு
முறுவலுடன் அவள் திருமுகம் நினைந்து கொண்டு
(திருவீதி)
சரணம் - 1
வில்வலிமை அறிந்து அவள்
விழிவலிமையைக் கொண்டு
சுயம்வரம் வென்றவன் என்
மனதையும் வென்றவன் (திருவீதி)
சரணம் - 2
ஒருமாது ஒருசொல்
ஒரு செயல் என்று
பெருமையுடன் இந்த
நிலமிசை வாழ்ந்தவன் (திருவீதி)
சரணம் - 3
சரணம் சரணம் என்று
திருவடி பணிந்தவரை
அருகழைத்து இருத்தி
கருணை புரிந்தவன் (திருவீதி)
சரணம் - 4
ஒரு முறையே அவன்
திருநாமம் உரைக்க
பிறவிப்பிணி அகற்றி
திருவருள் செய்பவன் (திருவீதி)
I do not know anything about karnAtic music; but my brain associated with "mA ramaNan... umA ramaNan" in Hindolam. AND my brain could not associate it with reeti-Gowlai. I liked the entire composition and the singing as well.
ReplyDelete