Sunday, 8 November 2020

Ninaitha vaazhvu tharum

 பாடல் : நினைத்த வாழ்வு தரும் நித்யகல்யாணி 

ராகம் : தோடி 

தாளம் : ஆதி 


பல்லவி 

நினைத்த வாழ்வு தரும் நித்யகல்யாணி 

உனை நினைக்க வருவாய் இங்கு விரைந்தோடி 

(நினைத்த)


அனுபல்லவி 

அனிச்ச வாழ்வெனது அம்ருதவர்ஷிணி

இனி தழைத்திடவே வந்தெனைப் பாரினி

(நினைத்த)

சரணம் 

குனித்த புருவமும் செவ்வாயிதழ் கண்டு 

பனித்த விழிகளொடு உனைப் பணிந்தேனே 

இனித்ததென் வாயுமே நின்திருநாமத்தில் 

அனைத்தும் நீயெனப் பணிந்தேன் நின்திருப்பாதத்தில் 

(நினைத்த)


{சரணத்தை அடுத்து வரும் பல்லவி "நினைத்த வாழ்வு தரும்" என்ற வரி ஸ்வரப்ரஸ்தாரத்திற்கு உகந்தது.}


No comments:

Post a Comment