திரையாழி மேற்துயிலும் திருமாலே பெருமாளே
ஒரு ஆழி கீழ்ப்பட்ட மறைமீட்ட பெருமாளே
துயராழி தான்தீர்க்க தூண்பிளந்த பெருமாளே
கணையாழி ஈந்தாங்கோர் உயிர்காத்த பெருமாளே
ஒருஆழி கடந்தாங்கே சிறைமீட்ட பெருமாளே
பிறவாழி யாம்கடக்க அருள்வாயெம் பெருமாளே!
No comments:
Post a Comment