Sunday, 8 November 2020

கனவிலே எழுதி மடித்த கவிதை

 திரையாழி மேற்துயிலும் திருமாலே பெருமாளே 

ஒரு ஆழி கீழ்ப்பட்ட மறைமீட்ட பெருமாளே 

துயராழி தான்தீர்க்க தூண்பிளந்த பெருமாளே 

கணையாழி ஈந்தாங்கோர் உயிர்காத்த பெருமாளே 

ஒருஆழி கடந்தாங்கே சிறைமீட்ட பெருமாளே 

பிறவாழி யாம்கடக்க அருள்வாயெம் பெருமாளே! 

No comments:

Post a Comment