Thursday, 12 August 2021

கனவிலே எழுதி மடித்த கவிதை

 முற்றத்தில் நிலவொளி படர்ந்திருக்க 

சித்தத்தில் அவனினைவு தொடர்ந்திருக்க 

அற்றைத் திங்கள் மெல்ல குறைந்திருக்க 

நெற்றித் திலகத்தோன் உள்ளம் நிறைந்திருக்க 

ஒற்றையில் நிற்பவளை அவன் நோக்கினான் 

சித்தத்தின் அச்சந்தனை அவன் போக்கினான் 

தண்முத்தத்தில் புதுமச்சங்கள் உருவாக்கினான் 

நித்திலங்களொடு விண்ணரை நிலவு 

மெத்தைதனை நாடியது அரைமனதொடு 

காத்திருந்த பொழுது நெடும் பொழுதாக 

பார்த்திருக்கும் பொழுது நொடிப் பொழுதாக 

தோற்றம் தந்ததே மனதில் மாற்றம் தந்ததே!

No comments:

Post a Comment