கனவிலே எழுதி மடித்த கவிதை – 8
வழக்கமாக எனது கனவிலே வருகைதரும் கனவுப் புலவன் 16 மே 2017 அன்று மதியமும் வந்தான். எஸ்.பி.பி அவர்களின் குரலில் ஒரு பாடலைப் பாடிச் சென்றான். அவன் தந்த பாடல் வரிகள்:
பல்லவி:
இன்றடிக்கும் காற்று வந்து (தந்தனன தானன்னன்ன)
என்றும் வீசுமே (தந்தன்னானன்னா)
நம் சொந்தபந்தம் ஒன்றுகூடி (தன தந்தனன்ன தந்தனன்ன)
மகிழ்ந்திருப்போமே (தனத்தனத் தானா)
இன்றடிக்கும் காற்று வந்து
என்றும் வீசுமே
நம் சொந்தபந்தம் ஒன்றுகூடி
மகிழ்ந்திருப்போமே
அநுபல்லவி:
நொந்திருந்த காலமெல்லாம் வெந்துவிட்டதே (தந்தனன தானன்னன்ன தந்தன்னானன்னா)
நொந்திருந்த காலமெல்லாம் வெந்துவிட்டதே (தந்தனன தானன்னன்ன தந்தந்தந்தன்னா)
நாம் வென்று காட்டும் நாளும் இன்று வந்துவிட்டதே
(தன தந்தனானா தானானன்ன தந்தந்தந்தன்னா)
இன்றடிக்கும் காற்று… தகதோம் தகதோம் ஹாங்
இன்றடிக்கும் காற்று வந்து
என்றும் வீசுமே
நம் சொந்தபந்தம் ஒன்றுகூடி
மகிழ்ந்திருப்போமே
சரணம்-1:
மக்கள் மனதில் மாற்றம் (தந்தன் தனனத் தானா)
அது தருமே இனி ஏற்றம் (தன தனனாதன தானா)
சில வெட்கங்கெட்ட கூட்டம் (தன தன்னன்னன்னன் தானா)
அவை எட்டுத்திக்கும் ஓட்டம் (தன தன்னன்னன்னன் தானா)
மக்கள் மனதில் மாற்றம்
அது தருமே இனி ஏற்றம்
சில வெட்கங்கெட்ட கூட்டம்
அவை எட்டுத்திக்கும் ஓட்டம்
இன்றடிக்கும் காற்று… தகதோம் தகதோம் ஹாங்
இன்றடிக்கும் காற்று….. தகதிமி தகதிமிதோம் ஆ ஹாங்
இன்றடிக்கும் காற்று வந்து
என்றும் வீசுமே
நம் சொந்தபந்தம் ஒன்றுகூடி
மகிழ்ந்திருப்போமே
சரணம்-2:
இளைஞர் கையில் நாடு (தகதிமி தகதிமி தானா)
அவர் திறமைகளைத் தேடு (தன தனனன்னன்னன் தானா)
நற்கடமைதான் நம் வீடு (தந்தனனன்தானன் தானா)
அதை தினமும் நாடி ஓடு (தன தனனன்னானன் தானா))
இளைஞர் கையில் நாடு
அவர் திறமைகளைத் தேடு
நற்கடமைதான் நம் வீடு
அதை தினமும் நாடி ஓடு
இன்றடிக்கும் காற்று… தகதோம் தகதோம் ஹாங்
இன்றடிக்கும் காற்று….. தகதிமி தகதிமிதோம் ஆ ஹாங்
இன்றடிக்கும் காற்று வந்து
என்றும் வீசுமே
நம் சொந்தபந்தம் ஒன்றுகூடி
மகிழ்ந்திருப்போமே
நொந்திருந்த காலமெல்லாம் வெந்துவிட்டதே
நொந்திருந்த காலமெல்லாம் வெந்துவிட்டதே
நாம் வென்று காட்டும் நாளும் இன்று வந்துவிட்டதே
இன்றடிக்கும் காற்று… தகதோம் தகதோம் ஹாங்
இன்றடிக்கும் காற்று….. தகதிமி தகதிமிதோம் ஆஹாங்
இன்றடிக்கும் காற்று வந்து
என்றும் வீசுமே
நம் சொந்தபந்தம் ஒன்றுகூடி
மகிழ்ந்திருப்போமே
No comments:
Post a Comment