கனவிலே எழுதி மடித்த கவிதை-12:
பிப்ரவரி 20, 2018
தாளனைய நாவாலே தரைநீரைத்
தானுண்டு தலைநிமிர்ந்து பின்னும்
தன்னுடலுங் கரமுந்தான் மலர்ந்து
பின்னே பிஞ்சாகிக் காயாகித்
தான் பின்னே நற்கனியுமாகித்
தான் பெற்ற செல்வந்தனைத்
தானே யுண்டதில்லை என்றும்
தன்பாற் கல்லெறிந்தோர்க்குத்
தாழாதே கனியுதிர்க்கும் எஞ்ஞான்றும்
தான்பட்ட கல்லடிக்காய்த்
தன்பொருட்டு கண்ணீர் உதிர்க்கா
வத்தருவன்ன எம்மனது என்றென்றும்
என்பாற் பலன்வேண்டி கல்லெறிவோர்க்கும்
என்பொருட்டு யான் கண்ணீர் உதிர்க்காது
அன்பெனும் கனியுதிர்ப்பேன் எஞ்ஞான்றும்
தெம்பாக நானிங்கு உள்ளவரை
தென்பாற் பயணம் செல்லும்வரை!
- உங்கள் மீது அன்புகொண்ட மனமரம்
பி.ஜெயராமன்.
No comments:
Post a Comment